Idhuvarai Yarum Lyrics
கண்ணும் மண்ணும் தெரியாமல்
எங்கெங்கோ நானும் ஓடுகிறேன்
உன் சொற்கள் இரண்டு என்னை உருட்ட
ஓடிக்கொண்டே பாடுகிறேன்
சட்டென நூல் அறுபட்ட ஒரு
காற்றாடியின் நிலை அது என் நிலையோ
அடுத்து எங்கே தெரியாத
புயலை போல நானும் அலைகிறேன்
இதுவரை யாரும் செய்யாததை
இன்று வந்தவள் நிகழ்த்துகிறாய்
ஓராயிரம் குதிரைகள் வேகத்தினை
என் ஒருவனுக்குள்ளே புகுத்துகிறாய்
அதே சாலை தான் அதே கூட்டம் தான்
வானம் பூமி காற்று இன்றி பறக்கின்றேன் நான்
அதே பூக்கள் அதே பறவை அதே தனிமை தான்
ஆனால் வேரு வாசம் வேறு சப்தம் வேறு முகம்தான்
முதல் முறையாக எனக்கு நானே பேசிக்கொண்டு நடக்கின்றேனே
எனக்கு நேரும் மாற்றம் கண்டு சிரித்து கொண்டு கிடக்கிறேனே
முதல் முறையாக எனக்கு நானே பேசிக்கொண்டு நடக்கின்றேனே
எனக்கு நேரும் மாற்றம் கண்டு சிரித்து கொண்டு கிடக்கிறேனே
இதுவரை யாரும் செய்யாததை
இன்று வந்தவள் நிகழ்த்துகிறாய்
ஓராயிரம் குதிரைகள் வேகத்தினை
என் ஒருவனுக்குள்ளே புகுத்துகிறாய்
இதுவரை யாரும் செய்யாததை
இன்று வந்து செய்துவிட்டாய்
ஓராயிரம் violin symphony
எனக்குள்ளே நிகழ்த்திவிட்டாய ்
சூமோ வீரன் உடலுக்குள்ளே
Super man′ன் ஆவி போலே
நகராமலே கிடந்த நானும்
காதல் வந்துப் பறக்கிறேனே
பெற்றோர் பற்றிய நினைவுகளோ
காதல் வந்ததும் மறைகிறதே
பெட்ரோல் ஊற்றிய பறவையை போலே
நெஞ்சம் காற்றில் விரைகிறதே
கண்ணும் மண்ணும் தெரியாமல்
எங்கெங்கோ நானும் ஓடுகிறேன்
உன் சொற்கள் இரண்டு என்னை உருட்ட
ஓடிக்கொண்டே பாடுகிறேன்
சட்டென நூல் அறுபட்ட ஒரு
காற்றாடியின் நிலை அது என் நிலையோ
அடுத்து எங்கே தெரியாத
புயலை போல நானும் அலைகிறேன்
முதல் முறையாக எனக்கு நானே பேசிக்கொண்டு நடக்கின்றேனே
எனக்கு நேரும் மாற்றம் கண்டு சிரித்து கொண்டு கிடக்கிறேனே
ஓடும் எந்தன் வேகம் கண்டு
ஒளியும் கொஞ்சம் பயந்து நிற்கும்
ஒலிம் பிக்கில் நான் கலந்திருந்தால்
எனக்கே தங்கம் வென்றிருக்கும்
எந்தன் பிம்பமோ என்னை விட
அழகாய் இன்று மாறியதேன்
யாரும் பார்த்திடா போதினிலே
ஆட்டம் போடத் தோன்றுவதேன்
கண்ணும் மண்ணும் தெரியாமல்
எங்கெங்கோ நானும் ஓடுகிறேன்
உன் சொற்கள் இரண்டு என்னை உருட்ட
ஓடிக்கொண்டே பாடுகிறேன்
சட்டென நூல் அறுபட்ட ஒரு
காற்றாடியின் நிலை அது என் நிலையோ
அடுத்து எங்கே தெரியாத
புயலை போல நானும் அலைகிறேன்
Writer(s): Vijay Antony, Madhan Karky<br>Lyrics powered by www.musixmatch.com
More from Nambiyaar
Loading
You Might Like
Loading
3m 46s · Tamil