Oru Poiyavathu Lyrics
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களின் முன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்பப் பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்று தான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்
பார்க்கும் கண்கள் ஒன்று தான்
உண்டால் ரெண்டும் வேறு தான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினைத் திரட்டி
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்தப் பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார்
என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக்
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பென்னே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
கானல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன்
அந்த ஒரு சொல்...அந்த ஒரு சொல்...அந்த ஒரு சொல்...அந்த ஒரு சொல்...
உயிர் வாழ்வேன்..உயிர் வாழ்வேன்..உயிர் வாழ்வேன்
Lyrics powered by JioSaavn
More from Jodi
Loading
You Might Like
Loading
7m 4s · Tamil