Mottukkale Lyrics
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
எ ன் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
நீ ஒரு பூக்கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் bank locker′ல் சேமிக்கிரேன்
உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்
நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டையில் பூவாய் பூப்பேன்
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்
கடற்கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலை கொல்லப்பார்த் தேன்
உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான்
வெயிலை வெட்டப் பார்த்தேன் (பார்த்தேன்... பார்த்தேன்...)
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
Lyrics powered by JioSaavn
More from Roja Kkoottam
Loading
You Might Like
Loading
4m 59s · Tamil