Kanmaniyae Kadhal Enbathu Lyrics
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன் பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீ அறிவாய்
தேவையை நான் அறிவேன்
நாளொரு மோகமும் வேகமும்
தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன்
மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
Lyrics powered by JioSaavn
More from The Musical Saga of Ilaiyaraaja
Loading
You Might Like
Loading
4m 22s · Tamil