Chinnanchiru - Duet (From "Meendum Kokila") Lyrics
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
ஆ ஆ ஆ
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
ஷபாஸ், பலே
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்த ிலே, மோதும் விரகத்திலே செல்லம்மா...
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
Writer(s): Ilaiyaraaja, Kannadhasan<br>Lyrics powered by www.musixmatch.com
More from Classical Hits - Based On Carnatic Raaga
Loading
You Might Like
Loading
4m 20s · Tamil