Oru Parvai Lyrics
நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே
நான் தத்தெடுத்திடாத தங்க மணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும் சொல்லவில்லையே
அடி கண்ணே தூங்காதே
சிறு பெண்ணே கலங்காதே
ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன்
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்
அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன்
ஒரு அன்பால மெட்டுப் படிச்சேன்
உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து
அதக் கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து
உன் கூட இருந்தா அது போதும் எனக்கு
வாடியிருந்தா துன்பம் எனக்கு
ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன்
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்
நான் ஆதாரம் இல்லா அந்தரத்து வானம்
என் நாவோடு சேரும் நாட்டுப்புற கானம்
என் சொந்தக் கதைய சொல்லிப் படிக்கச் சந்தமில்லையே
அதச் சொன்னா ஆறாது
என் சொந்தம் மாறாது
நான் தாயாரைப் பார்த்ததுமுண்டு
ஆனா தாயின்னு சொல்லவுமில்லே
தெனம் பாலூட்டி என்ன வளர்த்த
பரிவான சொந்தமும் இல்லை
இந்த ஊரு முழுக்க என் பந்து ஜனங்க
உண்மையிருக்கும் வெள்ளை மனங்க
ஒரு காவலிருக்கு என் கை வணங்க
நான் கானம் படிச்சேன் கண்ணெ தொறக்க
நான் தாயாரைப் பார்த்ததுமுண்டு
ஆனா தாயின்னு சொல்லவுமில்லே
ஒரு ஈ எறும்பு கடிச்சாலும் தாய் மனசு நோகும்
நீ பாய் விரிச்சு படுத்தாலே இப்ப என்ன ஆகும்
ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து காத்துக் கிடந்தா
அந்தத் தாயோட மொகம் பாரு
கண்ணு ஒரு நாளும் உறங்காது
நான் பாடாத பாட்டுகளில்லை
அதக் கேக்காத ஆட்களுமில்லை
நா நாவாரப் பாடி அழைச்சா
வந்த பாக்காத பார்வையுமில்லை
என் தாயி கொடுத்த ஒரு சக்தியிருக்கு
ஒன்ன தட்டியெழுப்ப புத்தி இருக்கு
ஒன்ன தாவியணைக்க ஒரு நேரம் இருக்கு
அந்த நேரம் வரைக்கும் பாரம் இருக்கு
நான் பாடாத பாட்டுகளில்லை
அதக் கேக்காத ஆட்களுமில்ல
Lyrics powered by www.musixmatch.com
More from Best Of S.P.Balasubrahmanyam.
Loading
You Might Like
Loading
4m 44s · Tamil