Nododi Mannargale Lyrics
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும்
நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும்
நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
காண்பதென்ன இது மாயமா
என் ரசிகரில் பல வகை இது ஒரு புது வகை
உங்கள் நேசம் வாழ்க
ஆட சொன்னால் அது ஞாயமா
அட யமுனையை சிறை கொண்டு குவளைக்குள் அடைகிற
உங்கள் வீரம் வாழ்க
காசுகள் போட்டதும் பூக்கிற பூச்செடி நான்
இன்று கைதட்டும் ஓசையில் பூக்கிற பூச்செடி தான்
சூப்பர் ...
ரசனை வாழ்க
தங் யு ...
ரசிகன் வாழ்க
தங் யு
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும்
வேஷம் போட்டு நான் ஆடினால்
என் ரவிக்கையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற
ஆண்கள் கூட்டம் அங்கே
ஆண்கள் கூட்டம் அங்கே
வேஷம் இன்றி இன்று ஆடினேன்
அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
நண்பர் கூட்டம் இங்கே
அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும்
நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
நடனம் வாழ்க நடிகை வாழ்க
நலமாய் வாழ்க நாளும் வாழ்க
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
Writer(s): Maragadhamani, Vayramuthu<br>Lyrics powered by www.musixmatch.com
More from Vaaname Yellai
Loading
You Might Like
Loading
5m 2s · Tamil