Adadaa

Adadaa Lyrics

Pitaamagan  by Jesudass

Song  ·  171,352 Plays  ·  4:37  ·  Tamil

© 2003 Five Star Audio

Adadaa Lyrics

அடடா!! அகங்கார!!
அரக்கக் கைகளில் உலகிங்கே!

அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவனிங்கே?

விடவா இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா?
முடமாய் முடங்காது மூர்க்கர் இவர்தம்மை முடித்திடவா?

மனித குலத்தில் புரையோடி
மனதை அறுக்கும் ரணமெல்லாம்.
இனியும் வருத்த விடமாட்டேன்!
தனியனாக அறுத்தெறிவேன்!
தகனம் நடக்கும் இடத்தில்
எனது ஜனனம் என்று
புரிந்துகொள் மனிதா!"

அடடா!! அகங்கார!!
அரக்கக் கைகளில் உலகிங்கே!

அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவனிங்கே?

வறுமை துரத்த
வாழ்க்கையும் துரத்திட,
வறண்டு போன மனிதனைத் துரத்துவதோ!

பரிவில்லாத பாவிகள் துரத்திடப்
பதுங்கிப் பதுங்கிப் பகைவரும் துரத்துவதோ!

அந்தரி! வாராகி!
சாம்பவி! அமர சோதரி!
அமல ஜெகஜ்ஜால சூலி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி!
வனராஜ சுகுமாரி! கௌமாரி!

இரங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது,
நெருப்புக் கனலில் நீதியைக் காத்திடவே!

தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது,
துரோகக் கூட்டம்
தொலைவதைப் பார்த்திடவே!

வையமே! வானமே! வாழ்த்திடு!
தீயவை யாவையும் மாய்த்திடு!
நாளை உலகில்
நல்ல மனிதன் தோன்றட்டுமே!

விடவா இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா?
முடமாய் முடங்காது மூர்க்கர் இவர்தம்மை முடித்திடவா?

மனித குலத்தில் புரையோடி
மனதை அறுக்கும் ரணமெல்லாம்.
இனியும் வருத்த விடமாட்டேன்.
தனியனாக அறுத்தெறிவேன்!
தகனம் நடக்கும் இடத்தில்
எனது ஜனனம் என்று
புரிந்துகொள் மனிதா!"

காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ?
கடலில் ஆடும்
அலைகளைத் தடுப்பதுண்டோ?
ஆற்றைத் திருப்பச் செய்பவன் உண்டோ?
நேற்றை நிறுத்திப் பிடித்தவன் எவரும் உண்டோ?

பொறியரவ முடித்தவனே!
நெருப்பு விழி துடிப்பவனே!
கரித்தோலை உடுப்பவனே!
புலியாடை உடையவனே!
சுடுகாடு திரிபவனே!
திரிசூலம் தரிப்பவனே!

எழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது,
இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே!
பிடிபடாத பேயர்கள் எல்லாம்,
பொடி பொடிக்கக் கரங்கள் துடிக்கிறதே!

தடுப்பவன் எவனடா? திறமுடன்
தாண்டிவா! எல்லையை, எனைத்தொட,
ஒருவன் இல்லை, இருவன் இல்லை, எவனும் இல்லையே...!

அடடா!! அகங்கார!!
அரக்கக் கைகளில் உலகிங்கே!
அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவனிங்கே?
விடவா இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா?
முடமாய் முடங்காது மூர்க்கர் இவர்தம்மை முடித்திடவா?

மனித குலத்தில் புரையோடி
மனதை அறுக்கும் ரணமெல்லாம்.
இனியும் வருத்த விடமாட்டேன்.
தனியனாக அறுத்தெறிவேன்!
தகனம் நடக்கும் இடத்தில் எனது
ஜனனம் என்று
புரிந்துகொள் மனிதா!!...
அடடா!! அகங்கார!!
அரக்கக் கைகளில் உலகிங்கே!
அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவனிங்கே?
விடவா இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா?
முடமாய் முடங்காது மூர்க்கர் இவர்தம்மை முடித்திடவா?

Lyrics powered by www.musixmatch.com


More from Pitaamagan

Loading

You Might Like

Loading


4m 37s  ·  Tamil

© 2003 Five Star Audio

FAQs for Adadaa